Inspiration

பள்ளத்தாக்கை சமமாக்குவார்

பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும்!
ஏசாயா 40:4.

ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த செய்தியின் வாயிலாக  உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

 

ஆண்டவராகிய தேவன் சொல்லுகிறார் பள்ளங்கள் எல்லாம் உயர்த்தப்படும், சகல மலைகள், குன்றுகள் தாழ்த்தப்படும், சமபூமியாகும் கோணலானவைகள் செவ்வையாகும் கரடானவைகள் சமமாகும். ஏற்றத் தாழ்வுகள் இனி இல்லை என்றார். என்ன ஒரு அருமையான தேவ வார்த்தை ஆம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆம் என்றே இருக்கிறது. இந்த வார்த்தையை வாசிக்கிறவனும் கேட்கிறவனும் இதை தியானிக்கிறவர்களும் இதன்படி நடக்க தன்னை அர்ப்பணிக்கிறவர்களும் பாக்கியவான்கள், மேலானவர்கள். ஒரு நடந்த சம்பவத்தை ஒரு புஸ்தகத்தில் வாசித்தேன். ஒரு தேசத்தில் ஒரு அழகிய பூங்கா ஒன்றை அமைத்து அதை ஜனங்கள் கண்டு களிகூருவதற்காக ராஜா அந்த பூங்காவை ஏற்படுத்தினார். அதை பராமரிக்க சிலரை ஏற்படுத்தி அதற்காக பணங்களையும் வாரி வழங்கினார். பல மாதங்கள் கடந்த பின்பு ஒரு நாள் அந்த ராஜாவுக்கு அந்த தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவர் தன் மந்திரிமார்களோடு புறப்பட்டு வந்தார். அதை பராமரிக்க ஏற்படுத்தப்பட்டவர்களே அதை பராமரிக்காமல், பாதுகாக்காமல் குப்பைகளாக, புதர்களாக விட்டு விட்டார்கள். ராஜாவுக்கு இருக்கிற வேளையில் இங்கு எங்கு வரப்போகிறார் என்று தங்கள் சொந்த காரியங்களில், வேலைகளில் ஈடுபட்டார்கள். 

 

திடிரென ராஜா வந்து பார்த்தார் மலை போல குப்பைகளும் மாட்டுச் சானங்களும் குவிந்து கிடந்தன. அந்த தோட்டம் நறுமணம் வீசுவதற்குப் பதிலாக துர்நாற்றம் வீசியது. அந்த ராஜாவுக்கு மிகுந்த கோபம் வந்தது, இப்படி தோட்டத்தைக் கெடுத்து விட்டீர்களே, மட்டுமல்ல இந்த குப்பைகளை எல்லாம் இங்கு கொட்டி மலையைப் போல குவித்து விட்டீர்களே என் பணத்திற்கும், என் சம்பளத்திற்கும் நீங்கள் கணக்கு சொல்ல வேண்டும். ஒரு மாதம் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். நீங்கள் என் விருப்பப்படி அழகிய தோட்டமாகவும் நறுமணம் பரவும் இடமாகவும் மாற்ற வேண்டும் இல்லை என்றால் என் கோபத்திற்கு உள்ளாகி தண்டிக்கப்படுவீர்கள், சிறைச்சாலையில் போடப்படுவீர்கள் என்று எச்சரித்து ஒரு வாய்ப்புக் கொடுத்து, தருணம் கொடுத்து சென்று விட்டார். அதை பராமரிக்க ஏற்படுத்தப்பட்டவர்கள் எல்லாரும் நடுங்கி திகைத்து என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து நடுங்கினார்கள். அப்படிப்பட்ட வேளையில் தான் அந்த தோட்டத்தின் அருகே அருமையான ஒரு ஆறு, நீரூற்று ஓடிக்கொண்டிருந்தது. திடீரென அவர்கள் எல்லாருக்கும் ஓர் ஞான உதயம் வந்தது. இந்த நீருற்றை, ஆற்றை இந்த தோட்டத்திற்குள் திருப்பி விட்டால் என்ன. இது இங்கே பாய்ந்தால் செழிப்பாகுமே, மட்டுமல்ல உயரமான குன்றுகளைப் போல் குவிந்து கிடக்கிற இந்த குப்பைகள் கறைந்து ஓடி சுத்தமாகுமே என்று ஆலோசனைப் பண்ணி அப்படியே எல்லாரும் சேர்ந்து தண்ணீரை தோட்டத்திற்குள் திருப்பி விட்டார்கள். 

 

அந்த தண்ணீர் பாய பாய அந்த இடம் சுத்தமாகி, தூய்மையாகி, குப்பைகள், மலை போல் குவிந்த எல்லாம் தண்ணீரினால் அடிக்கப்பட்டு சமபூமியாகி ராஜா விரும்பியபடி அழகிய தோட்டமாக மாறியது. அசுத்தமான அந்த இடம் நறுமணமுள்ள சுகந்த வாசனையாக மாறியது. அடுத்த மாதம் ராஜா சொன்னபடியே அந்த இடத்தை பார்வையிட வந்தார். அவருக்கு மிகுந்த ஆச்சரியம் இதை எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் அழகான தோட்டமாக மாற்றினீர்கள். இது எப்படி நடந்தது என்று ஆச்சரியத்தோடு கேட்டார். அப்போது தான் நடந்ததை ஆற்றில் ஓடிக்கொண்டிருந்த அந்த நீரூற்றை திருப்பி சரி செய்து அழகிய தோட்டமாக உருவாக்கி நறுமணம் வீசும் இடமாக மாற்றியதைச் சொன்னார்கள். எனக்கு அருமையானவர்களே நம்முடைய ராஜாவும், ஆண்டவராகிய இயேசுவும் நம்மிடத்தில் இதைத்தான், இப்படித்தான்  எதிர்ப்பார்க்கிறார். நமக்குள் எங்கேயே ஓர் இடத்தில் ஒரு பள்ளம் விழுந்து விட்டது. மற்றொரு பக்கம் மலைகுன்று போல குப்பைகளும், அழுக்குகளும் சேர்ந்து விட்டது. நம்முடைய வாழ்க்கையை கெடுத்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் தடையாக சில காரியங்கள் நமக்குள் இருக்கிறது. அதை சரி செய்து சமமாக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பள்ளமாகவும் அல்ல, குன்றுகளும், மலைகளுமாக அல்ல சமபூமியாக, சமாதானமாக இருங்கள் என்று சொல்லுகிறார். வேதத்தை வாசித்துப் பாருங்கள் 2 ராஜா 3:16.17-ல் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள் மழையையும் காணமாட்டீர்கள் ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருக ஜீவன்களும் குடிக்கும்படிக்கு இந்தப் பள்ளத்தாக்குத் தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது இதை நம்புகிறவர்கள் பாக்கியவான்கள். உங்களுக்கும் அப்படியே நடக்கும். வாய்க்கால்களை வெட்டுங்கள் தேவன் உங்களுக்குள் வருவதற்கும், உங்களை ஆசீர்வதிப்பதற்கும் வழியை ஏற்படுத்தி கொடுங்கள். அப்பொழுது பள்ளங்கள் எல்லாம் நிரப்பப்படும், குன்றுகள் எல்லாம் நிறைவாகும். நீங்கள் சமபூமியாய் உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றால் இப்பொழுது இருக்கின்ற நிலையில் இருந்தால், மலைகள், குன்றுகள் போல அகந்தையாக, பெருமையாக, அசுத்தமாக இருந்தால் தேவன் உங்களை ஆசீர்வதிக்க முடியாது. உங்களைத் தாழ்த்தி பணிந்து, தேவனுக்கு முன்பாக உங்கள் வழிகளை சரி செய்ய வேண்டும். நீங்கள் தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி உங்களை சரி செய்யாவிட்டால் அவர் உங்களை தாழ்த்த வேண்டியதாய் இருக்கும். சரி செய்து தடைகளை நீக்க வேண்டியதாய் இருக்கும். யாத் 10:3-ஐ வாசித்துப் பாருங்கள் மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய் என்றார்கள். ஏனென்றால் தேவன் வாக்களித்த கானான் தேசத்திற்கு போக பார்வோன் ஒரு மலையைப் போல், குன்றுகளைப் போல் இஸ்ரவேல் ஜனங்களைத் தடுத்துக் கொண்டிருந்தான். அவன் தன்னை தாழ்த்தாதபடியினால் இருதயம் கடினமாகி, தேவனுக்கு விரோதமாய் இருந்தபடியால் தேவன் பார்வோனை தரைமட்டமாக்கினார். செங்கடலில் அவன் சேனையை மூழ்கடித்தார். வேதம் சொல்லுகிறது சங் 50:23-ல் தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

 

இனி நாம் நம்முடைய சுபாவத்தில், குணத்தில் நம் வாழ்க்கையில் குன்றுகளைப் போல, மலைகளைப் போல அகந்தையாக, மேட்டிமையாக பிறரை மதிக்காமல், நேசிக்காமல் வெறுத்து, பகைத்து தாறுமாறாய் வாழ்ந்தால் தேவன் சும்மா விடமாட்டார். தம்முடைய நாமம் தூஷிக்க விடமாட்டார். நம்மை சரி செய்ய விரும்புகிறார். கோணலானவைகள் செவ்வையாகவும், கரடானவைகள், முரட்டு குணங்கள், சுபாவங்கள் மென்மையாக மாற வேண்டும். அப்படி உங்கள் வழிகளைச் செவ்வையாக்கி சரி செய்தால் ஆண்டவராகிய தேவன் சொல்லுகிறார்  ஏசா 41:15-ல் இதோ போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுயான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன். நீ மலைகளை மிதித்து நொறுக்கி குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கி விடுவாய் என்றார். நீ குன்றுகளையும் மலைகளையும் மிதித்து நொறுக்கி அவைகளை சமபூமியாக்க உன்னை புதிய யந்திரமாக, கூர்மையான ஆயுதமாக மழுங்கி போன, செயல் இழந்த உன் வாழ்க்கையை உயிருள்ளதாக மாற்றவும், உன் பள்ளங்களை எல்லாம் சமமாக்கவும், உன் பள்ளங்களை எல்லாம் நிரப்பவும் ஆண்டவர் இந்த நாட்களை உனக்கு ஈவாக, கிருபையாக கூட்டிக் கொடுத்திருக்கிறார். இது உன்னுடைய நாள், உன்னுடைய நேரம், உன்னுடையது நிரப்பப்படவும் மேன்மை அடையவும் கர்த்தர் உனக்கு கிருபை பாராட்டி இருக்கிறார். போகட்டும் எப்படி நம்மை நிரப்புகிறார், எந்தெந்தப் பள்ளங்களை நிரப்புகிறார் என்பதைப் பார்ப்போம்.

 

அழுகையின் பள்ளத்தாக்கை மாற்றுகிறார்.

 

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள், மழையும் குளங்களை நிரப்பும். சங் 84:6. பள்ளங்கள் எல்லாம் நிரப்பப்படும், சமபூமியாகும் என்ற ஆண்டவராகிய தேவன் எந்தெந்தப் பள்ளங்களை நிரப்புகிறார் என்பதைப் பார்ப்போம். முதலாவது அழுகையின் பள்ளத்தாக்கை மாற்றுகிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காலமுண்டு சிரிக்க ஒருகாலமுண்டு, அழுவதற்கு ஒரு காலமுண்டு. ஆதியாகமம் 37 முதல் 43 வரை அதிகாரங்களை வாசித்துப் பார்த்தால் யோசேப்பு என்ற நீதிமான் தன் சொந்த சகோதர்களால் பகைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, பொய்குற்றம் சுமத்தப்பட்டு தன் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டான். ஏறக்குறைய 18 வருஷங்கள் அவன் அழுகையின் பள்ளத்தாக்கிலே கடந்து போனான். இனி பிழைப்போம், தன் சொந்த தேசத்திற்கு திரும்புவோம், தன் தகப்பனைப் பார்ப்போம் என்ற வாய்ப்பே அவனுக்கு இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அவன் அழுகையை தேவன் ஆனந்தக் களிப்பாய் மாற்றினார். எரே 31:9-ல் அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள் அவர்களை வழி நடத்துவேன். அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கும், இடறாத செம்மையான வழியிலே நடக்கப் பண்ணுவேன் என்றவர் அவன் அழுகையை ஆனந்தக் களிப்பாய் மாற்றி எந்த தேசத்தில் கண்ணீர் வடித்தாரோ அந்த தேசத்தில் அவரை உயர்த்தி கனம் பண்ணி, கண்ணீர் வடித்த நாட்களுக்கும் வேதனைப்பட்ட காலங்களுக்கும் சரியாய் உயர்த்தினார். உன் துக்க நாட்கள் முடிந்து போகும் என்றவர் அவன் கடந்து போன கண்ணீரின், அழுகையின் பள்ளத்தாக்கை மாற்றினார். 

 

அன்னாள் என்ற ஒரு பெண்னணப் பாருங்கள் பல வருஷம் பிள்ளையில்லாததினால் மணமடிவாக்கப்பட்டாள். யாரால்1 சாமு 1:6-ல் கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால் அவளுடைய சக்களாத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். இதின் நிமித்தம் அவள் ஆலயத்தில் போய் மனம் கசந்து அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி அழுதாள் தேவன் அவளை கைவிட்டாரா? சங்கீதம் 6:8 சொல்லுகிறது அக்கிரமக்காரரே நீங்கள் எல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள், கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார் என்றார். ஆண்டவராகிய தேவன் அவளுக்கு கிருபையாய் இறங்கி இஸ்ரவேலின் மிகப் பெரிய தீர்க்கதரிசியை பெற்றெடுக்க கிருபை செய்தார். அவள் அழுகையின் பள்ளத்தாக்கை மாற்றினார்.

 

பக்தனாகிய தாவீதின் வாழ்க்கையைப் பாருங்கள் 1 சாமு30:4-ல் அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். காரணம் அவ்வளவு பிரச்சனை, அவ்வளவு போராட்டம். கடைசியாக தன் மனைவி, பிள்ளைகள் எதிரிகளால் கடத்தப்பட்டு விட்டார்கள். இனி உயிரோடு வருவார்களா? அவர்களை மீட்க முடியுமா என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. அவர் கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து எல்லாராலும் கைவிடப்பட்டு, மறக்கப்பட்டது மட்டுமல்ல சங் 23:4-ன்படி நான் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடக்கிறேன். பல வேளைகளில் மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் தான். என்னால் நன்மையைப் பெற்றவர்கள், என்னால் பாதுகாக்கப்பட்டவர்கள் இப்பொழுது எனக்கு விரோதியாகி, பகைத்து என்னை வீட்டை விட்டே துரத்தி காடுகளிலும், மலைகளிலும் சாப்பாடு இல்லாமல், உறக்கம் இல்லாமல், தங்க இடமில்லாமல் கொடிய மிருகங்களோடு போராட வைக்கிறார்களே என்று அழுகிறதற்குப் பெலன் இல்லாமல் போகும் மட்டும் அழுதார்கள். சங் 56:8-ல் என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் வருவதாக எனக்கு யார் உண்டு என்று கதறினார். தேவன் தாவீதுக்கு இறங்கினார், எந்த இடத்தில் கண்ணீர் வடித்தாரோ, எந்த இடத்தில் அழுதாரோ அதே இடத்தில் அவரை உயர்த்தி, சத்துருக்களுக்கு முன்பாக அவர் தலையை உயர்த்தி பந்தியை ஆயத்தப்படுத்தி எதிரிகளைக் காணமலே போகப் பண்ணினார். 

 

ஆகவே தான் அவர் சொல்லுகிறார் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதையே அவர்கள் நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள் என்றார். என் அன்பு சகோதர, சகோதரிகளே இதுவரை எந்தெந்த காரியங்களுக்கு எல்லாம் கண்ணிர் வடித்தாயோ, அவமானப்பட்டாயோ, எதிரிகளால் பரியாசம் பண்ணப்பட்டாயோ அந்தந்த காரியங்களில் தேவன் உனக்கு ஒரு உயர்வைத் தரப்போகிறார், பள்ளத்தாக்கை சமமாக்கப் போகிறார். உயர்த்தப் போகிறார். இனி உனக்கு முன்பாக இருக்கின்ற மலைகளும், குன்றுகளும் தரைமட்டமாக்கப்படும். இனி விரோதிப்பவனும் இல்லை, இடையூறு செய்கிறவனும் இல்லை என்ற அளவுக்கு கர்த்தர் உன்னை உயர்த்தப் போகிறார். பளளங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியால் நிரம்பிட வேண்டும். மலைகள், குன்றுகள் சமபூமியாகும் என்ற தேவனுடைய வார்த்தையின்படி உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா பள்ளத்தாக்கையும் சமமாக்கி உங்களை ஆசீர்வதிப்பாராக.

 

எலும்புகளின் பள்ளத்தாக்கு

 

கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டு போய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்  எசே 37:1. அடுத்ததாக எலும்புகளின் பள்ளத்தாக்கை தேவன் நிரப்புவார். நம்முடைய பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் கல்லறைத் தோட்டம், சுடுகாடு இப்படிப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசியை தேவன் கொண்டு சென்றார். எதற்காக நீயும் ஒரு நாள் இங்கு வரப்போகிறாய் என்பதற்காக அல்ல. இங்கு இருந்து தான் என்னுடைய வல்லமையை வெளிப்படுத்தி மாபெரும் ஒரு சேனையை கர்த்தருக்காக எழும்பச் செய்யப் போகிறேன் என்று அவருக்கு காண்பிப்பதற்காக தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகளின் பள்ளத்தாக்கிற்கு கொண்டு சென்றார். 

 

இங்கிலாந்து தேசத்தில் ஜான்வெஸ்லி என்ற ஒரு தேவ ஊழியரை கர்த்தர் எழுப்பினார். கர்த்தர் அவர் கூட இருந்து செய்த காரியம் பயங்கரமாய் இருந்தது. பலத்த அற்புதங்கள் அவர் மூலமாய் நடந்தது, மரித்த அநேகரை அவர் உயிரோடு எழுப்பினார். அவர் மூலமாக உலகமே அசைக்கப்பட்டது. கர்த்தர் அவரை பரிசுத்த ஆவியால் நிரப்பிய போது அவர் சென்ற ஆலயத்தில் பிரசங்கம் செய்யும்படி வாய்ப்புக் கேட்டார். அந்த ஆலய நிர்வாகத்தினரோ அவரை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, வாய்ப்பும் அளிக்கவில்லை. அவர் சோர்ந்து போகாமல் ஒரு கல்லறைத் தோட்டத்தில் சென்று தன்னுடைய பிரசங்கத்தை, ஊழியத்தை ஆரம்பித்தார். அப்படி பண்ணிய பிரசங்கத்தில் தான் கணக்கற்ற மககள் தொடப்பட்டு இயேசுவை ஏற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை, எழுப்புதலை பெற்றுக் கொண்டார்கள். அதன் பிறகு கர்த்தர் அவரை உலகம் முழுவதும் மகிமையாய், வல்லமையாய் பயன்படுத்தினார். இன்றைக்கு வசதி வாய்ப்பு இருந்தால் தான் ஊழியம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகளின் பள்ளத்தாக்கில் நடத்தி இந்த எலும்புகள் முதலில் ஒன்று சேருமா? அந்தந்த எலும்புகள் சரியாய் மற்றவைகளோடு இணைக்கப்படுமா? நரம்புகள், சதைகள் உண்டாகுமா?, உயிரடையுமா? என்று ஆண்டவராகிய தேவன் தீர்க்கதரிசியைப் பார்த்து கேட்டார். ஒரு வேளை நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால், நம்மைப் பார்த்து கேட்டால் நிச்சயமாய் அவரைப் பார்த்து நடக்காது, முடியாது என்று சொல்லியிருப்போம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் எசேக்கியேல் தீர்க்கதரிசியைப் பார்த்து தேவரீர் நீர் அதை அறிவீர் என்று சொல்லச் சொன்னார். ஆண்டவராகிய தேவன் சொன்னார் இப்பொழுது இந்த எலும்புகளை உயிரடையச் செய்கிற வல்லமையுள்ள வார்த்தை உன்னிடத்தில் இருக்கிறது. நீ பரிசுத்த ஆவியானவருக்கு கட்டளையிட்டு, ஆவியானவரே நான்கு திசைகளிலுமிருந்து புறப்பட்டு வந்து இந்த எலும்புகளின் மேல் இறங்குவராக என்றார். அவர் அப்படி பரிசுத்த ஆவியில் நிறைந்து தீர்க்கதரிசனம் சொல்லும் போது இந்த உலர்ந்த எலும்புகளில் அசைவு உண்டாயிற்று. அதன் பிறகு உயிரடைந்து காலுன்றி மாகப்பெரிய சேனையாய் எழும்பி நõன்றார்கள்.

 

இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகளும், தேவனுடைய சபைகளும் உலர்ந்த எலும்புகளாய், சதையில்லாமல், நரம்பு இல்லாமல், உயிர் இல்லாமல், அசைவு இல்லாமல் உலர்ந்து போய், பட்டுப்போயó, ஒருமனம் இல்லாமல் உயிரற்ற நிலையில் இருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட பாடுகள், வேதனைகள், இழப்புகள், நஷ்டங்கள், நம்பிக்கை துரோகங்கள், நமக்கு அன்பானவர்களை இழந்து உலர்ந்து போன எலும்புகளாய், உயிரற்ற வாழ்க்கையாய், அசைவற்று, உற்சாகமிழந்து காணப்படுகிறோம். ஒரு கல்லறைத் தோட்ட வாழ்க்கையைப் போல் காணப்படுகிறோம். ஆனால் அப்படியே போகட்டும், கிடக்கட்டும் என்று நம்மை விடவில்லை. இந்த உலர்ந்த எலும்புகள், இந்த அசைவற்ற ஜெப ஜீவியம், இந்த உற்சாகமில்லாத ஊழியம் இனி உயிரடையும் எப்போது நீங்கள் எனக்காக காத்திருந்து ஜெபிக்கின்ற போது நான் உங்களுக்கு அருளும் என்னுடைய தீர்க்கதரிசன வார்த்தையினால் நீங்கள் உயிரடைவீர்கள். 

 

நாம் நம்முடைய தேவைகளுக்காக அல்ல நம்முடைய எதிர்பார்ப்புகளுக்காக அல்ல கர்த்தருக்காக காத்திருக்கும் போது தான் கர்த்தர் அவருடைய வார்த்தையின் மூலமாக நம்மோடு பேசுகிறார். அதில் உண்டாகிற பெலன் தான் நம்மை உயிரடைய செய்கிறது. நம்மை தேவனோடு ஒன்று சேரச் செய்கிறது. இனிவரும் நாட்களில் தேவன் தம்முடைய பிள்ளைகளை, தம்முடைய சபையை பெலனடையச் செய்ய போகிறார். எலும்புகளின் பள்ளத்தாக்கை ஆலயமாக சபையாக மாற்றப் போகிறார். தீர்க்கதரிசனம் உரைக்கிற, இந்தியாவை அசைக்கிற வல்லமையை வெளிப்படுத்துகிற ஊழியங்களை, ஊழியர்களை எழுப்பப்போகிறார். இயேசு சொன்னார் யோவான் 5:25-ல் அந்நாளில் மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும் அது இப்பொழுதே வந்திருக்கிறது அதை கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்றார். இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் என் அருமையான சகோதரனே, சகோதரியே எலும்புகளின் பள்ளத்தாக்கில் கிடக்கிறாயா என்னை தூக்கிவிட, எழுப்பிவிட, இதிலிருந்து வெளியே கொண்டுவர ஒருவருமில்லை என்று அங்கலாய்க்கிறாயா? இன்றைக்கு உன்னை தூக்கி எடுக்க, உன்னை வெளியே கொண்டுவர, நீங்கள் உயிரடைய மகா சேனையாய் எழும்ப கர்த்தர் எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிலிருந்து வெளியே கொண்டு வரப்போகிறார். நீ எழுந்திருக்க முடியாதபடிக்கு குன்றுகளும், மலைகளும் சூழ்ந்திருக்கிற அந்த தடைகளை மாற்றி, நொருக்கின அலைகளின் தலையை தட்டி இதற்கு மேல் வராதே என்று உன்னை உயரமான இடத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். உன் பள்ளங்கள் நிரப்பப்படும், உன் பள்ளங்கள் சமநிலைப்படுத்தப்படும். உன் வாய்க்கால்களில் தண்ணீர் ஓடும் நீங்கள் காற்றையும் காண மாட்டீர்கள் மழையையும் காணமாட்டீர்கள் ஆனால் உங்களுக்கு அற்புதம் நடக்கும். ஒன்றும் இல்லை என்று எண்ணப்பட்டாலும் சகலத்தையும் உடையவர்களாக தேவன் உங்களை மாற்றுவார்.

 

நீங்கள் உங்களுக்காக அல்ல தேவனுக்காக மகாபெரிய சேனையாய் எழும்புவீர்களாக கர்த்தர் இந்த உலர்ந்த எலும்புகளை கொண்டு மகிமையான காரியங்களைச் செய்வாராக, அது  உங்களுக்கு மேன்மையாக இருப்பதாக. உங்கள் பள்ளங்களை எல்லாம் தேவன் நிரப்பி உங்களுக்கு முன்பாக இருக்கின்ற குன்றுகளையும், மலைகளையும் சமபூமியாக்குவாராக!!. 

எதிர்காற்று—பெரும்காற்று

கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பெரும் காற்றை வரவிட்டார். கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்கதாக பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று யோனா 1:4. கர்த்தர் யோனாவின் மேலும், அவன் பிரயாணம் பண்ணின கப்பல் மீதும், அவன் கூட போன மனிதர்கள் மேலும் பெரும் காற்றை அனுப்பினார். அதனால் அந்த கப்பல் உடையவும், அவர்கள் பிரயாணம் தடைபடவும், அவர்கள் நோக்கம் நிறைவேறாமல் போகவும், கர்த்தர் அதை அனுமதித்தார். காரணம் தேவனுக்கு விரோதமாய் ஒரு மனிதன் போகும் போது, அவருடைய சித்தத்தை நிறைவேற்றாமல் இருக்கும் போது, தேவனை அறிந்திருந்தும் அவருக்காக ஒன்றும் செய்யாமல் எனக்கென்ன என்று இருக்கும் போது, அவருக்குக் கீழ்ப்படியாமல், நம் சுய நலத்திற்காக வாழும் போது, தேவன் எப்படியோ போகட்டும் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்óக மாட்டார். யோனா அதைத்தான் செய்தார். அவர் தேவ சமூகத்தை விட்டு ஓடிப்போகும் போது, கர்த்தர் அதைத் தடுத்து பெருங்காற்றை வரவிட்டார். அவரை பாடுகளுக்கு உட்படுத்தினார். சாத்தான் கோதுமையை சுளகில் புடைக்கிறது போல புடைக்க உத்தரவு, அனுமதி கொடுத்தார். அன்றே அந்தக் காற்றிலே யோனா அகப்பட்டு மாட்டிக் கொண்டு பலபாடுகளுக்கு, சித்தரவாதைகளுக்கு உள்ளானார். கடைசியாக மரண போராட்டம், பாதாளங்களுக்குச் சென்று வந்துவிட்டான், பிழைத்து வந்தது மறுபிறவி போல் ஆகிவிட்டது. காரணம் கர்த்தருக்கு விரோதமான ஊழியம், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றாமல், தன் சொந்த சித்தத்தை நிறைவேற்றுதல், இப்படிப்பட்ட எந்த மனுஷனானாலும், எந்த விசுவாசியானாலும், எந்த ஊழியங்கள், ஊழியக்காரர்கள் ஆனாலும் தேவன் விடமாட்டார். கண்டும்ó காணாதவர் போல் இருக்க மாட்டார். அவர்களை சரிபண்ணி, தமது மந்தைக்குள் வரவும், பண்டக சாலையில் அனுப்பவும், உருவாக்கவும் செய்து விடுவர்ர். எந்த மனிதனும் தேவனுடைய வழிக்கு விரோதமான வழியில் போய் விட முடியாது. அதற்குத்தான் தேவன் யோனாவின் மேல் பேரும்காற்றை அனுப்பினார். அதற்குத்தான் அவர் பண்டக சாலை வைத்திருக்கிறார். அழிக்கிற காற்று, உருவாக்குகிற காற்று, அற்புதம் செய்கிற காற்றை வைத்திருக்கிறார். தேவைப்படும் போது எந்தக் காற்றை யாருக்கு அனுப்ப வேண்டுமே அவற்றை அனுப்பி சரி செய்து அவருடைய பாதையில் நடத்துகிறார். இதுதான் யோனாவின் வாழக்ககையில் நடந்தது. அவர் மாறும் வரை, தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியும் வரை, தேவ சித்தத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் வரை பெரும் காற்றை தேவன் நிறுத்தவில்லை. அதன் பிறகு தான் தேவன் கொந்தளிப்பை அமர்த்தினார். நாம் அவருக்கு விரோதமாய் போகும் போது சில பாதிப்புகளை, சில பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். இதைத்தான் நாம் வேதாகமம் முழுவதிலும் காண முடிகிறது. சீஷர்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் எப்போது எல்லாம் அவர்கள் இயேசுவை விட்டு விலகினார்களோ, எப்போது எல்லாம் அவர்கள் அவரை விட்டு பின்வாங்கினார்களோ அப்பொழுது எல்லாம் அவர்களும், அவர்களுடைய படகும், மீன்பிடிக்கிற தொழிலும் அலைகழிக்கப்பட்டது. நொறுக்கப்பட்டது, மூடப்பட்டது என்று மத்தேயு 8:24, லூக்கா 8:24-லும் சொல்லுகிறது. அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாய் கடலிலே பெரும்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். ஏனென்றால் அந்த படகில் இயேசு இல்லை. அப்படியிருந்தாலும் அவர்கள் அவரை உறங்க, தூஙóக வைத்துவிட்டு தங்கள் சொந்த காரியங்களைக் காணவும், பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். ஊழிய அழைப்பையே மறந்து விட்டார்கள். ஊழிய தரிசனத்தையே இழந்து விட்டார்கள். அவ்வப்போது அவருக்கு எதிர்மறையாய், விரோதமாய் செயலó ஆற்றினார்கள். ஆகவே காற்று அவர்களுக்கு, அவர்களுடைய வேலைக்கு, கிரியைகளுக்கு எதிராக இருந்தது. வேதம் சொல்லுகிறது மத்தேயு 8:24-ல் அதற்குள்ளாக படகு நடுக்கடலில் சேர்ந்து எதிர்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலையப்பட்டது, நெறுக்கப்பட்டு. அவர்கள் தத்தளித்தார்கள். தடுமாறினார்கள், கதறினார்கள், காப்பாற்றனும் என்று அப்பொழுது தான் இயேசுவை நோக்கி கூப்பிட்டார்கள், உதவிக்கு அழைத்தார்கள். ஏன எதிர்காற்றில் சிக்கிக் கொண்டார்கள். இன்றைக்கு நாம் தேவனுக்கு விரோதமாய் போகும் போது, வாழும் போது எதிர் காற்றில் சிக்கிக் கொள்வோம். வேண்டாம் இந்த போராட்டம், வேண்டாம் இந்த பாடுகள், பல வருஷங்களுக்கு முன்பு தேவனுடைய ஊழியத்தை செய்த ஒரு தம்பி இருந்தான், அவன் எனக்குத் தெரிந்தவன், வேண்டியவனும் கூட, திடீரென தேவனுடைய ஊழியத்தை விட்டுவிட்டு ஆசிரியருக்குப் படிக்கப் போகிறேன் என்று படிக்கப் போனான். அவன் போன சில நாட்களிலே கோர்ட் ஒரு கேஸ்ஸில், வழக்கில் தீர்ப்புச் சொல்லி தேவையில்லாத, தகுதியில்லாத சில ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை மூட உத்தரவு பிறப்பித்தது. அதிலே இந்த தம்பியின் பயிற்சிப் பள்ளியும் இருந்தது. இவன் தேவனை மறந்து, ஊழியத்தை விட்டு போனதின் நிமித்தம் எல்லாம் மூடப்பட்டது. பலரும் பாதிக்கப்பட்டார்கள். காரணம் தேவனுடைய வழியை விட்டு விலகினதின் நிமித்தம் எதõர்காற்றிலே சிக்கிக் கொண்டார்கள். அதிலிருந்து காப்பாற்றப்பட. தப்புவிக்க பெரும்பாடுபட வேண்டியதாயிற்று. அதே நேரம் தேவனுடைய வழியில் நடந்து அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். தப்புவிக்கப்பட்டார்கள். ஆதி 8:1-ல் தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டுமிருகங்களையும், நாட்டுமிருகங்களையும் நினைத்தருளினார். தேவன் பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார் ஏறக்குறைய நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்த தண்ணீர், வெளியே வர முடியாமல் பூமியின் மனுக்குலம் எல்லாம் அழிந்த நிலையில், நோவாவும், அவன் குடும்பமும் அழிவுக்கு விலக்கி, பாதுகாக்கப்பட்டு அற்புதமாய் வெளியே வந்தார்கள். காரணம் அந்த தண்ணீர் வற்றும்படி, வெள்ளம் வடியும்படி கர்த்தர் ஒரு காற்றை நோவாவுக்காக அனுப்பி இருந்தார். அந்த காற்று பெருவெள்ளத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றி, தப்புவித்தது. தேவன் அவருடைய வழியில் நடக்கிறவர்களை, அவருடைய சித்தங்களைச் செய்கிறவர்களை தப்புவிக்கிறார், மீட்டுககொள்கிறார். இதற்கு தேவன் தமது பண்டக சாலையிலிருந்து ஆதரவான, தப்புவிக்கிறதான காற்றை அனுப்பினார். புதிய வானம், புதிய பூமிக்குள் நடத்துகிறார். இதைத்தான் செங்கடலிலும், இஸ்ரவேல் ஜனங்கள் செல்லும் போது உலர்ந்த தரையாக மாற்றி, ஜனங்களை அக்கரைக்கு கொண்டு போய்ச் சேர்த்தார். யாத் 14:21-ல் மோசே தம்முடைய கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டினான், அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போகப் பண்ணினார். ஐலம் பிளந்து பிரிந்து போயிற்று. இதற்காகத் தான் அவர் காற்றை பண்டக சாலையில் வைத்து வைத்திருக்கிறார். விதவிதமாய், விதவிதமாய் அவற்றை ஜனங்களுடைய காரியங்களுக்கு ஏற்றார் போல், காற்றை அனுப்பி சிலரை தப்புவிக்கவும்,, சிலரை அழிக்கவும் செய்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை செங்கடலிலே அóற்புதமாய், தண்ணீரை குவியலாக நிற்க வைத்து அவர்களை தப்புவித்தார். அந்த தேவன் இன்றைக்கு உயிரோடு இருக்கிறார். யார், யார் கொடிய வெள்ளத்தில் அகப்பட்டு, செங்கடல் போன்ற சூழ்நிலையில், சத்துரு வெள்ளம் போல வருகிறானோ அவர்களை தப்புவிக்க, மீட்க தேவன் தமது பண்டக சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார், அவர்களை கரை சேர்க்கிறார். சிலருக்கு அது ஜீவ காற்றாகவும், பலருக்கு அது மரண காற்றாகவும் இருக்கிறது. இன்றைக்கு இந்த செய்தியை வாசõக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே நீங்கள் பெரும் காற்றினால் அலைகழிக்கப்படாதபடி தேவனுக்கு விரோதமான காரியங்களில் சிக்கõக் கொள்ளாதபடிக்கு அவர் விருப்பத்தை அறிந்து, சித்தத்தை செய்து, அவர் வீசுகிற, அவர் நகர்த்துகிற பக்கத்தில் சென்று விடுங்கள். அப்பொழுது எதிர்காற்றுக்கும், பெரும் காற்றக்கும் தப்புவிக்கப்படுவீர்கள். அதற்குத்தான் அவர் காற்றை தமது பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார்.

உலர்ந்த எலும்புகளில் காற்று

அப்பொழுது அவர் என்னைப் பார்த்து நீ, ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை, மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள் மேல் ஊது என்கிறார். எசே 37:9. அடுத்ததாக காற்றை எதற்காக பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார் எலும்புகள் உயிரடைய வேண்டும் என்று. எந்த ஒரு மனிதன் தேவனை விட்டு விலகுகிறானோ அல்லது தேவனை மறக்கிறானோ அவன் உலர்ந்து போவான், பட்டுப்போவான், பச்சை மரம் பட்ட மரமாகிவிடும். இயேசு சொன்னார் யோவான் 15:6-ல் ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப் போல, அவன் எறியுண்டு உலர்ந்து போவான் என்றார். இன்றைக்கு தேவனை மறக்கிறவர்கள், அவரோடு வாழாதவர்கள் யாவரும் உலர்ந்த எலும்புகள், பட்டுப்போனவர்கள், சதையில்லாத எலும்புகள், ஜீவன் இல்லாதவர்கள் அப்படியாக எசேக்கியேல் ஒரு தரிசனத்தைக் கண்டார். அவன் ஊழியமே சுடுகாட்டில், கல்லறையில் தான் ஆரம்பித்தது. எலும்புகள் சேர்ந்து இல்லாமல், இணைந்து இல்லாமல் அக்கு வேர், ஆனி வேராக இருந்தது. செயலற்றுக் கிடந்தது. பிசாசு பிடித்த லேகியோனைப் போல கல்லறைகளில் கிடந்தார்கள். இப்படி நடைபிணமாக இருந்த இந்த எலும்புகள் பெலனடைய, உயிரடைய ஒரு ஆக்சிசன், ஒரு ஜீவ காற்று தேவைப்பட்டது. அதுதான் பரிசுத்த ஆவியானவரின் காற்று, இந்த காற்று மனிதர்கள் மேல் வந்தால் தான், எலும்புகளில் மேல் வந்தால் தான் கல்லறையில் இருப்பவர்கள், மரித்தவர்கள், மவுனத்தில் வாசம் பண்ணுகிறவ்கள் உயிரடைய முடியும். யோவான் 5:25-27-ல் மரிதóதோர் தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்றார். இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனென்றால் பிரேத குழியிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும் என்றார். இன்றைக்கு மரித்தோர்கள் ஆத்துமாவில் யார் யார் எல்லாம் தேவனோடு தொடர்பில்லாமல் வாழ்கிறார்கள், அவர்கள் அத்தனை பேரும் உயிரடைய வேண்டுமானால் உயிர்த்தெழ வேண்டுமானால், இந்த ஜீவ காற்று எத்திசையிலிருந்தும் புறப்பட்டு வர வேண்டும், அதற்குத் தான் ஆண்டவராகிய தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியைப் பார்த்து, நீ இந்த உலர்ந்த எலும்புகளுக்கு தீóக்கதரிசனம் கூறு,ó இந்த எலும்புகள் பிரிந்து கிடக்கிற, கூட்டை விட்டு வெளியே வந்த, தேவனுடைய பாதுகாப்பை விட்டு வெளியே வந்த அத்தனை பேருக்கும் தீர்க்கதரிசனம் கூறு என்றார். எசேக்கியேலுக்குச் சொல்லப்பட்டபடியே காற்றே நான்கு திசைகளிலுமிருந்து புறப்பட்டு வா என்று சொன்ன போது, அந்த எலும்புகள் உயிரடைந்து ஒன்று சேர்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு ஜீவன் அடைந்து, பெலனடைந்து உயிர் பெற்றது. தேவனுக்காக சேனையாக எழும்பியது. அது தான் தேவனுடைய உயிர் மூச்சு. ஜீவ காற்று இதைத்தான் யாத் 15:8-ல் தேவனுடைய நாசியின் சுவாசக் காற்று என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் இயேசு தன் சீஷர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். பின்வாங்கி, பிரிந்து தேவனை விட்டு விலகின சீஷர்களை மறுபடியும் ஒன்றுச் சேர்த்து, மேல் வீட்டு அறையில் காற்றை அவர்கள் மேல் அனுப்பினார். அப் 2:2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டார்கள், புதுப்பிக்கப்பட்டார்கள். தேவனுக்காக சேனையாய் எழும்ப ஆரம்பித்தார்கள், உயிரடைந்து ஊரெல்லாம் புறப்பட்டுப் போய் ஊழியம் செய்தார்கள். இன்றைக்கு இந்த செய்தியை வாசிக்கின்ற என் அன்பு சகோதர, சகோதரிகளே உங்கள் எலும்புகள், சதையில்லாதபடி உயிரடையும்படி, பெலனடையும்படி ஒருமனம் உண்டாகும்படி சேனையாய் எலும்பும்படி இந்த தேவன் அனுப்புகிற பரிசுத்த ஆவி என்ற காற்று உங்கள் மேல் வீசபட வேண்டும், நீங்கள் உயிரடைய வேண்டும். அதற்குத் தான் அவர் காற்றை தமது பண்டகசாலையிலிருந்து அனுப்புகிறார். புறப்படப்பண்ணுகிறார். இந்த காற்று தான் இஸ்ரவேலó ஜனங்களுடைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தது. எண் 11:31-ல் அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து கடைகளை அடித்துக் கொண்டு வந்தது. இன்றைக்கு உங்கள் தேவைகள் பூர்த்தியாக, உங்களுக்கு அற்புதம் நடக்க இந்த காற்று அவசியம். இந்த காற்று அனுதினமும் உங்கள் மேல் வீச வேண்டும். மட்டுமல்ல 2 ராஜா 2:1, 11-லும் கர்த்தர் எலியாவை சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறபோது எலியா, எலிசாவோடு கூட கில்காலிலிருந்து புறப்பட்டுப் போனான். அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும், அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். இந்த காறóறு நம்மேல் வீசும் போது, அப்பொழுது தான் நாம் மேலே ஏறிப்போக முடியும். நம்மை பரலோகம் கொண்டு சேர்ப்பதற்காகத் தான் தேவன் இந்த காற்றை நமக்கு பண்டகசாலையிலிருந்து அனுப்புகிறார். அதனால் நாம் உயிரடைந்து, பெலனடைந்து ஒரு பெரிய சேனையாய் எழும்பி, நாம் உயர உயர பறக்க, பரலோகம் போக நம்மை பயிற்றுவித்து காற்றை பண்டக சாலையிலிருந்து அனுப்புகிறார். நம்மை சேனையாய் மாற்றுகிறார். வாரும் வாரும் காற்றாய் வாரும், அக்கினியாய் வாரும். அதற்காகத்தான் தேவன் அவருடைய பிள்ளைகள் மேல் காற்றை அனுப்புகிறார். என் ஆண்டவராகிய தேவன் தாமே உங்கள் மேல் தம்முடைய ஆவியை ஊதி உயிருள்ளவர்களாக மாற்றி, பலத்த சேனையாய் எழும்பப்பண்ணுவாராக.