Community

Have a testimony of Miracle to share?

One of the greatest gifts one can give is sharing our faith with others while expressing gratitude to God. We would love to hear what incredible things God has done for you and the many ways He has changed your life! Your story will be a blessing for many who need inspiration and encouragement.

Read these stories of faith, and be encouraged.

தலைப்பு – தேவனால் எல்லாம் கூடும்

எனக்கு திருமணம் நடந்து 4 வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. பலரும் எங்களை பலவிதமாகப் பேசினார்கள். மனிதர்களின் நிந்தையாக பேச்சுகளால் மனம் உடைந்து போனோம். கடந்த ஆண்டு. இயேசு வாழ்கிறார் ஊழியத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டேன். அந்த ஆண்டு வாக்குத்தத்தத்தின்படி இரட்டிப்பான நன்மையை தேவன் தருவார், நிந்தைகள் மாறும், தேவ நாமம் மகிமைப்படும் என்று சொல்லி ஜெபித்தார்கள். அதே போல் 2022-ஆம் ஆண்டிலேயே என் மனைவி கர்ப்பமாக தேவன் கிருபை செய்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 18-ஆம் தேதி அழகான ஆண்குழந்தையை தேவன் எங்களுக்கு கொடுத்தார். எங்களுக்காக ஜெபித்த உங்களுக்கு நன்றி. எங்கள் நிந்தையை மாற்றி, எங்கள் தலையை நிமிரச் செய்து, மகிழச் செய்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

சகோதரர். பிரான்ங்லின் – சென்னை

என் கர்ப்பபை அதன் நிலையை விட்டு கீழே இறங்கி விட்டதால் அதிகமான வலியும், வேதனையும் என் சரீரத்தில் இருந்தது. மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்ய சொல்லி விடுவார்களோ என்று மிகவும் கலங்கினேன். ஆப்ரேஷன் செய்யும் அளவுக்கு எனக்குப் பொருளாதார வசதியும் இல்லை. மிகுந்த மனவேதனையில் நான் தங்óகளிடம் எனக்காக ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். நீங்களும் எனக்காக ஜெபித்தீர்கள். தேவன் ஜெபத்தைக் கேட்டு ஆப்ரேஷன் இல்லாமலே எனக்கு பரிபூரண சுகத்தைக் கொடுத்தார். இப்பொழுது எந்த வலியும் வேதனையும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன். என் பரிகாரியாகிய தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

சகோதரி. ஜெயசுதா - திருநெல்வேலி

என் மகன் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கம்பெனியில் ஆள் குறைப்பு செய்ததில் என் மகன் கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலையை இழந்தான். என்னிடம் தொலைபேசியில் தகவல் சொன்ன போது நான் இயேசுவை தினம் பார்க்கிறேன் பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்த சாட்சி பகுதியை வாசித்த போது எனக்குள் விசுவாசம் வந்தது. தேவன் என்னையும் சாட்சி எழுத வைப்பார் என்று விசுவாசித்து, பொருத்தனை பண்ணி ஜெபித்தேன். தேவன் என் பொருத்தனையின் ஜெபத்தைக் கேட்டார். மார்ச் மாதம் இயேசுவை தினம் பார்க்கிறேன் பத்திரிக்கை எங்கள் வீட்டிற்கு வந்தது. அதை நான் வாசித்துக் கொண்டிருக்கும் போதே சென்னையிலிருந்து என் மகன் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு அம்மா எனக்கு வேற ஐடி கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது என்று தகவலை சொன்னான். எனக்கு மிகுந்த சந்தோஷம். பத்திரிக்கையில் சாட்சி எழுதுவேன் என்று பொருத்தனை பண்ணி ஜெபித்த என் ஜெபத்திற்கு தேவன் பதிலை தந்து அற்புதம் செய்தார். அவருக்கே மகிமை உண்டாவதாக.

சகோதரி. கனிமொழி – மதுரை