Inspiration
கர்த்தரோடிராவிட்டால் சிதறடிக்கப்படுவீர்கள்
“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” மத் 12:30
ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” மத் 12:30 என்று ஆண்டவராகிய இயேசு சொல்லுகிறார். நீங்கள்தேவனோடு இல்லாவிட்டால் துரோகியாக, சத்துருவாக மாறி விடுவீர்கள். கிறிஸ்துவ வாழ்க்கையில் கூட நாம் எல்லாரும் தேவனோடு இருக்க வேண்டும்.அப்படி இராவிட்டால் சாத்தான் நம்மை சிதறடித்து விடுவான்.இக்கட்டான சூழ்நிலையில் இயேசுகெத்சமனே தோட்டத்திற்கு சீஷர்கள்மூன்று பேரை கூட்டிக்கொண்டுஜெபம் பண்ண போனார்.நீங்கள் எப்பொழுது ஜெபம் பண்ண வேண்டும் என்றால் இக்கட்டு வரும் போது,வேதனை வரும் போது,துன்பம் வரும் போது ஜெபிக்க வேண்டும்.நாம் தேவனோடு இருக்க வேண்டும்.அதனாலó தான் இயேசு சீஷர்களை கெத்சமனே தோட்டத்திற்கு கூட்டிக்கொண்டு போய் (மத்தேயு 26:40,41) நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? ஜெபம் பண்ண கூடாதா? என்று இயேசு கேட்கிறார்.
எப்பொழுது ஒருவர் தேவனோடு இருக்க முடியும் என்றால் அவரை நோகóகி ஜெபம் பண்ணும் போது, அவரோடு பேசும் போது தான். மொபைல் போன் பார்க்கும் போது இயேசுவோடு இருக்க முடியாது, சாப்பிட்டுக்கிட்டே, பார்த்துக்கிட்டே, தூங்கிக்கிட்டே இயேசுவோடு இருக்க முடியாது. அவரை ஒரு எஜமானராக, மீட்பராக, இரட்சகராக நினைத்து அவருக்கு ஒரு சிங்காசனம் வைத்து அவருக்கு முன்பாக நீங்கள் இருக்க வேண்டும். தாவீது கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறார்.இயேசு மலை மீது ஏறி தம்மோடு இருப்பதற்காக சீஷர்களை அழைத்தார். பிசாசுகளை துரத்துவதற்காக 12 பேர்களை தேர்நóதெடுத்தார்.நீங்கள் அவரோடு இருக்க வேண்டும் என்று உங்களை ஆண்டவர் தெரிந்தெடுத்திருக்கிறார். ஜெபம் பண்ண முடியமால் சூழ்நிலைகள் உங்களுக்கு விரோதமாக இருக்கும் போதும், இன்னும் அதிகமாக போராட்டம், பிரச்சனை இருக்கும் போதும், நீங்கள் கர்த்தரோடு இருக்க பழக வேண்டும், சோர்ந்து போக கூடாது, நம்பிக்கை இழந்து விடக்கூடாது. நீங்கள் ஆண்டவரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.
நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார், நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார், அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். 2 நாளா 15:2. நீங்கள் அவரோடிருந்தால் அவர் உங்களோடு இருப்பார்.நீங்கள் அவரோடு இல்லாவிட்டால் அவர் உங்களை விட்டு விடுவார். ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கு விரோதமாய் பாவம் செய்தால் கர்த்தர் அவர்களை மன்னித்து விடுவார்.ஒரு மனிதன் கர்த்தருக்கு விரோதமாக, பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தால் யார் மன்னிக்க முடியும்.அதனாலóதான் நாம் கர்த்தரோடுகூட இருக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது.
1. யோபு கர்த்தரோடிருந்தார்
யோபுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது இக்கட்டான கொடிய வியாதியில், வலி, வேதனையில் அவன் தேவனோடு இருந்தான். அவன் நண்பர்கள் அவனைப் பார்த்து இவ்வளவு நடந்தும் இன்னுமா தேவனை தேடுகிறாய் என்றார்கள். அவன் மனைவி இன்னுமா உம்முடைய உத்தமத்தில் இருக்க போகிறாய் என்று சொல்கிறாள். அதற்கு யோபு இன்னும் தேவனை நம்புவேன். இனிமேலும் நம்புவேன் என்று சொல்லுகிறார். எரேமியா 31:20-ல் எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய் பேசினது முதல் அவனை நினைத்துக் கொண்டே இருக்கிறேன், ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது, அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.அதே போல யோபுவுக்கு இரங்கினார். மனைவி கேவலமாக பேசினாள்,நண்பர்கள் திட்டி தீர்த்தார்கள், ஆறுதல் சொல்ல வந்தவர்கள் காயப்படுத்தினார்கள். ஆனால் யோபு எந்த நிலையிலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் நான் கர்த்தரோடு இருப்பேன் என்பதில் உறுதியாய் நின்றார்.
நீங்கள் தண்ணீர்களை கடக்கும் போதும்,அக்கினியில் நடக்கும் போதும் வேகாதிருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிற தேவன் உங்களோடு இருப்பார்.தானியேலை சிங்கக்குகையில் போட்டுவிட்டு ராஜா கேட்கிறார், நீ இடைவிடாமல் ஆராதிக்கின்ற தேவன் உன்னை தப்புவிக்க வல்லவராக இருந்தாரா? என்று. அதற்கு தானியேல் இருந்தார், இனிமேலும் இருக்க போகிறார். நீங்கள் என்னை ஏழுமடங்கு அக்கினி சூழையில் போட்டாலும், நான் உங்களுக்கு சொல்ல போகிற பதில், தேவன் என்னோடு இருக்கிறார் என்பதே. என்னுடைய துன்பத்தில், உபத்திரவ நேரத்தில் நான் அவரோடு இருக்கிறேனா என்று தேவன் என்னைப் பார்க்கிறார்என்று தானியேல் சொல்லுகிறார். வேதத்தில் லூக் 22:28-ல் மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே என்று சொல்லப்பட்டுள்ளது.எனக்கு வந்த நாசமோசங்கள், அவமானங்கள்,சிலுவைகள், மனிதனுடைய சூழ்ச்சிகள்,போராட்டங்களில் என்னோடு கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே என்று சீஷர்களை பார்த்து இயேசு சொல்லுகிறார். ஆகவே தான் தேவன் சொன்னார் என்னோடு இராதவன் சிதறடிக்கப்படுவான் என்று. யோபு தனக்கு நேரிட்ட எல்லா உபத்திரவத்திலும் கர்த்தரோடு இருந்தான்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் தேவன் நம்மை தேற்றுகிறவராக இருக்கிறார். ஆனால் பழைய ஏற்பாட்டு காலத்தில் அப்படி அல்ல,தேவன் நினைத்தால்தான் கிருபை கிடைக்கும், நம்முடைய முற்பிதாக்கள் தங்கள் வாழ்க்கையில் உபத்திரவம்வந்தாலும் கர்த்தரையே நம்பினார்கள். நாம் அப்படி அல்ல, சிறு பிரச்சனையைக் கூட நம்மால் தாங்கமுடியவில்லை. ஆனால் யோபு என்ன வந்தாலும் நம்புவேன், என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று விசுவாசித்தான். அவனுக்கு 140 வருடம் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்து பல நன்மைகளை காணச் செய்தார். அந்த தேவன் இன்றும் உயிரோடு இருக்கிறார், நீங்கள் அவரோடு இருக்கிறீர்களா?. பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு என்று ஆண்டவர் சொல்லுகிறார்.நீங்கள் கர்த்தரை எந்த இடத்தில் உயர்த்தினாலும் அங்கு உங்களோடு இருப்பார்.உங்கள் வீடு பரலோகமாக மாறும்.உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். உங்களுடைய கண்ணீரின் நாட்களை முடியப் பண்ணுவார்.யோபு எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரோடு இருந்தான். நீங்கள் அவரோடு இருக்கிறீர்களா?
2. கர்த்தரை விட்டு விலகாதிருங்கள்
சாத்தானின் வேலை உங்களை தேவனிடம் இருந்து பிரிப்பது தான். ஆதாமும் ஏவாளும் பகலின் குளிர்ச்சியான வேளையில் ஏதேன் தோட்டத்தில் உலாவுகிற தேவனின் சத்தத்தை கேட்பார்கள். நாள்தோறும் தேவனை பார்ப்பார்கள். நன்மையை மட்டும் பார்க்கட்டும் என்று தேவன் அவர்களை வைத்திருந்தார். ஆனால் அவர்கள் கர்த்தருடைய சத்தத்தை அசட்டை பண்ணி, சாத்தானின் சத்தத்தை கேட்டார்கள். அதனால் அவர்களுடைய சரீரப்பிரகாரமான கண் திறக்கப்பட்டு தேவ சாயலை இழந்து விட்டார்கள்.ஏதேன் தோட்டத்தை விட்டு ஆண்டவர் அவர்களை விரட்டி விட்டார். சிதறடிக்கப்பட்டு போய் விட்டார்கள்.இன்றைய காலக்கட்டத்தில் நாம் ஆராதனை செய்யலாம், பாட்டு பாடலாம், ஆனால் மிகவும் முக்கியமானது ஜெபம் பண்ணுவதும்.அந்த ஜெபத்தில் நிலைத்திருப்பதும் தான்.
ஆண்டவரிடம் இருந்து நம்மை பிரிப்பது எப்படி? மனைவியிடம் இருந்து கணவனை பிரிப்பது, கணவனிடம் இருந்து மனைவியை பிரிப்பது, பிள்ளைகளை எப்படி பெற்றோரிடம் இருந்து பிரிப்பது என்று சாத்தான் பல கன்னிகளை வைத்திருக்கிறான். சாத்தானுக்கு ஆண்டவர் பல பெயர்களை வைத்திருக்கிறார். சோதனைக்காரன், பொய்யன், திருடன், அசுத்த ஆவி, அசுத்தங்களை கொண்டு வருகிறவன் என்று, ஆனால் இன்னொரு வசனம் சொல்லுகிறது நாகூம் 2:1-ல் சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான், அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து என்று.அவனுக்கு இன்னொரு பெயர் சிந்தனையை திசை திருப்புகிறவன். தேவன் நம்மை மன்னித்து திரும்பவும் அவருடைய கிருபைக்குள் கொண்டு வருகிறார். சிதறடிக்கிறவன் முன்பாக நம்மை காத்துக் கொள்ள நாம் கர்த்தரோடு இருக்க வேண்டும். ஆதாம் ஏவாளைப் போல நீங்கள் தேவனுடைய தோட்டத்திலிருந்து துரத்தப்படக்கூடாது. கர்த்தருக்கு முன்பாக நிற்க வேண்டும். இந்த ஜனத்தை எனக்காகவே ஏற்படுத்தினேன். இவர்கள் என்னுடையவர்கள். இவர்கள் என் பிள்ளைகள் என்று தேவன் சொல்லுகிறார். ஆகவே சிதறடிக்கிறவனக்கு நாம் நேரத்தை கொடுக்கக் கூடாது.
என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப் போல் வந்தார்கள், சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது, நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர். ஆபகூக் 3:14. என்னை சிதறடிக்க காற்றை போல் என் மேல் வந்தார்கள். அப்படியே அவர்களை நீர் திருப்பி விட்டீர் என்று சொல்லபட்டிருக்கிறது. உங்களுக்கு விரோதமாய் வந்த சாத்தானின் ஆயுதங்கள் அவனுக்கே திரும்ப போகிறது. சிதறடிக்கிறவர்களுக்கு முன்னாடி நீங்கள்தோய்ந்து போக மாட்டீர்கள். நீங்கள் அவரோடு இருந்தால் அவர் உங்களுக்காக நிற்பார். உங்களுக்கு அற்புதம் செய்வார்.
அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி, அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் என்றார்,மத்தேயு 9:36,37. தொய்ந்து போனவர்கள் என்றால் உற்சாகம் இழந்து, நம்பிக்கை இழந்து போனவர்கள்என்று அர்த்தம். இனி நம்புவதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள். நீங்கள் அவரோடு இருந்தால் உங்களுக்கு அநேக அற்புதங்கள் நடக்கும். நீங்கள் ஆண்டவரோடு இருப்பதற்கு ஒரே வழி அவருடைய சத்தத்தை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மரித்தோர் தேவனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வருகிறது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார், இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். லூக்கா 1:51 ஆண்டவர் பேதுரு என்ற சீஷனிடம் உங்களில் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான். எல்லாரும் மறுதலித்து ஓடி போவீர்கள் என்றார்.அதற்கு பேதுரு எல்லாரும் உம்மை விட்டு ஓடினாலும் நான் உமக்காக என் உயிரையே கொடுப்பேன் என்றான். பேதுருவின் சிந்தையில் பட்டயத்தை பற்றிய ஒரு அகந்தை இருப்பதை சாத்தான் புரிந்து கொண்டான், மற்ற சீஷர்கள்இயேசுவை மறுதலிக்கவில்லை பேதுருவை மட்டும் மறுதலிக்க வைத்தான். நம்முடைய இருதயத்தில், சிந்தையில் அகந்தை உள்ளவர்களாக நாம் இருந்தால் சிதறடிக்கப்பட்டு போய் விடுவோம்.
அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். மத்தேயு 26:31 மேய்ப்பனை வெட்டும் போது ஆடுகள் ஓடிப்போய் விட்டன, சிதறடிக்கப்பட்டன. இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்கின்ற நீங்கள் சிதறடிக்கப்படாதபடி ஆண்டவர் உங்களை பாதுகாக்கிறார். கர்த்தர் உங்களை சிதறடிக்காதபடிக்கு அவர் எல்லைக்குள்ளே, அவர் பாதுகாப்புகுள்ளே வைத்திருக்கிறார். உங்கள் பிள்ளைகள் தவறான வழியில் போகாதபடி ஆண்டவர் காத்துக் கொள்வார். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் அவரோடு இருந்தால் சாத்தான் உங்களை சிதறடிக்க முடியாது.
3. ஜெபத்தில் கர்த்தரோடிருங்கள்
அப்பொழுது சணல் வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும், பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவு பெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிடக் கேட்டேன். தானியேல் 12:7-ல் சொல்லப்பட்டபடி பரிசுத்த ஜனங்களின் வல்லமையை சிதறடித்தான். தேவபிள்ளைகள் பரிசுத்த ஆவினால் நிரம்பாமல், அந்நிய பாஷை பேசாமல் இருந்தால், சாத்தானை முடக்க முடியாது.அவன் திட்டமிட்டு தேவபிள்ளைகளைக் குறி வைக்கிறான். பரிசுத்த வல்லமையை சிதறடிக்கிற அந்த அரைக்காலமும், முழுக்காலமும் முடிவடையப் போகிறது. தானியேல் மூன்று வேளையும் ஜெபம் பண்ணினார். கர்த்தர் அவரோடு இருந்தார். பாபிலோனுக்கு சிறைப்பட்டு போன போது தானியேல் சொல்லுகிறார் 70 வருடத்திற்கு பிறகு நாம் சீயோனில் வாசம் பண்ணுவோம், எருசலேமை மறுபடியும் கட்டபோகிறோம் என்று தன்னோடு சிறைப்பட்டு வந்தவர்களுக்கு சொல்லுகிறார்.தானியேல் அந்ததேசத்தில் ஜெபம் பண்ணி கர்த்தரை தேடினதினால் சிறையிருப்பு மாறியது. இன்றைக்கு உங்கள் சிறையிருப்பும் நீங்கள் ஜெபம் பண்ணி கர்த்தரோடிருந்தால்மாற்றப்படும். கர்த்தர்சிதறடிக்கிறவனை இல்லாமல் போகப்பண்ணுவார்.
இந்த கடைசி காலத்தில் ஆவியானவர் சொல்லுகிறார் நீங்கள் அவரோடு இருக்க வேண்டும். வேதத்தில் நிலைத்திருக்க வேண்டும், ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்க வேண்டும் என்று. அப்பொழுது சிதறடிக்கிறவன் உங்களை விட்டு ஓடிப்போய் விடுவான், நீங்கள் ஜெயமாய் வாழ்வீர்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் மறந்துவிட்டு எனக்கு ஒரே பாடு, துயரம், போராட்டம், பிரச்சனை என்று சொல்லாமல், நீங்கள் கர்த்தரோடு எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டே இருக்க அவர் விரும்புகிறார், அப்பொழுது அவர் உங்கள் சிறையிருப்பை மாற்றுவார், சிதறடிக்கிறவனை உங்களை விட்டு துரத்துவார்.என் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.