Inspiration

சாகிறவனுடைய சாவை விரும்பாத தேவன்

எசேக்கியேல் 18:32 – மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள், சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

இவன் இந்த உலகத்தில் உயிரோடு இருக்க தகுதி இல்லாதவன், கொலைகாரன், திருடன், வஞ்சகன், ஏமாற்றுகிறவன் என்று சிலர் சொல்லுவார்கள். உலகம் மற்றவர்களை சில காரியத்தில், இவன் ஒரு குற்றவாளி, மரணத்துக்கு நியமிக்கப்பட்டவன், சாவை தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லும். ஆனால் கொலைக்கு நியமிக்கப்பட்ட மனிதனுடைய சாவை தேவன் விரும்புகிறதில்லை என்று வேதம் சொல்லுகிறது. மனம் திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள். நான் சாகிறவனுடைய சாவை விரும்புகிறதில்லை என்று தேவன் சொல்லுகிறார். இன்றைக்கு அநேகர் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் தான் இருக்கிறார்கள்.

கேன்சர் வியாதி மிகவும் கொடூரமானது. அணு அணுவாக சாகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு மரித்து விடுவார்கள் அல்லது நாளைக்கு மரித்து விடுவார்கள் என்று நினைக்கின்ற அளவிற்கு நிறைய பேர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒரு மருத்துவரை தெரியும், அவர் ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர். தன்னிடம் வரும் நோயாளிகளுக்குசிகிச்சை கொடுத்துக்கொண்டே இருப்பார். சில நாட்கள் வியாதி குறையும், திரும்பவும் அதிகரித்து விடும். இந்த வியாதி கிருமிகள் அதிகமாக பரவ பரவ சில உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதை எடுக்க வேண்டிய நிலைமை கூட வரும்.இதனால் தலைமுடிகள் அனைத்தும் கொட்டிவிடும். அவர்கள் தோற்றத்தில் உரு குலைந்து போய்விடுவார்கள். அப்பொழுதுதான் மருத்துவர் ஒரு முடிவு செய்வார், இந்த நபர் இனி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தவுடன், அந்த நபரிடம் நீங்கள் சரியாகி விட்டீர்கள் இனி உங்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது என்று சொல்லி அவரை அனுப்பி விட்டார். அந்த மனிதனும் மருத்துவர் சொன்ன வார்த்தையை நம்பி தன் வீட்டிற்கு சென்றார்.

பத்து ஆண்டுகளுக்கு பின்புஇந்த மருத்துவர் ஒரு ஷாப்பிங் சென்டருக்கு சென்றபோது அங்கு அந்த நபரை சந்தித்தார். பத்தே நாளில் இறந்து விடுவார் என்று தன்னால் அனுப்பி வைக்கப்பட்ட அந்த மனிதனை அங்கு அவர் பார்த்த போது நீங்கள் என்னிடம் மருத்துவம் பார்த்தவர் அல்லவா, உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். அவர் தனது பெயரை சொன்னார். மருத்துவரையும் அந்த நபரும் அறிந்து கொண்டார். மருத்துவருக்கு ஒரே அதிர்ச்சி. நீ எப்படி இன்று வரை உயிரோடு இருக்கிறாய் என்று அந்த நபரை கேட்டார். டாக்டர் நீங்க சரியாயிருச்சுன்னு சொல்லி அனுப்பி விட்டீங்க, நான் வீட்டுக்கு சென்று இயேசுவை நோக்கி கூப்பிட்டேன். அவர் எனக்கு சுகம்தந்து இன்று வரை என்னை உயிரோடு வாழ வைத்திருக்கிறார் என்றார். அப்பொழுதுதான் அந்த மருத்துவர் நினைத்தார் வியாதி முற்றி என்னால் கைவிடப்பட்ட ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை நோக்கி ஜெபித்தபோது அவர் சுகம் தந்து இன்றுவரை உயிரோடு இருக்கிறான். அந்த இயேசு எனக்கு வேண்டும் என்று சொல்லி அவர் இயேசுவை தந்த சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

பிலி 1:12-ல் பவுல் அப்போஸ்தலன் சொன்னது போல சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் என்ற வார்த்தையின்படி இந்த நபருக்கும்நடந்திருக்கிறது. இன்றைக்கு மரண ஆக்கினைக்கு இந்த உலகம் நியமிக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கொத்து கொத்தாகமடிந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தங்கள், நிலச்சரிவுகள், பூமி அதிர்ச்சிகள்ஏற்பட்டு ஜனங்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பொல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் சாப்பிடுகின்ற சாப்பாட்டில் இருந்து, குடிக்கின்ற தண்ணீர் முதற்கொண்டு அனைத்திலும்நச்சுத்தன்மை உள்ளதாய், விஷம் நிறைந்ததாய் இருக்கிறது. வியாதிகள் பெருகி கொண்டிருக்கிறது, மருத்துவமனைகளும் பெருகிக் கொண்டிருக்கிறது.வியாதி ஒரு பக்கம், குடும்ப பிரச்சனை ஒரு பக்கம், ஒவ்வொரு நாளும் மனிதன் போராட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் அனுதினமும்சாகிறேன், மடிந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார். இப்படி மரணத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிற, வேதனையோடு போர்க்களத்திலே நின்று செத்து மடிந்து கொண்டிருக்கிற மனிதர்களை பார்த்து தான் ஆண்டவர் சொல்லுகிறார் சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று. அப்படி என்றால் என்ன அர்த்தம் நீ வாழ வேண்டும், நீ வாழத் தகுதியானவன் என்று அர்த்தம். நீ இந்த பூமியிலே நீடித்த நாட்களாய் வாழத் தகுதியுள்ளவன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். நீ சாகவே மாட்டாய் என்று ஆண்டவர் சொல்லவில்லை, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு காலம் வைத்து இருக்கிறார். மண்ணிலே பிறந்த எவனும் ஒரே தரம் மதிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று வேதத்தில் எபிரேயர் 9:27-ல் சொல்லப்பட்டுள்ளது.

மனிதன் திடீரென்று மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம் அல்ல, நல்ல சுகத்தோடு, பலத்தோடு, தீர்க்காயுசோடு இந்த பூமியில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் 120 வயது என்பதை தேவன் நமக்கு நியமித்து வைத்திருக்கிறார். நான்ஆஸ்திரேலியாவிற்கு ஊழியத்திற்குச் சொல்லும் போது அங்கு ஒரு தாயார் இருந்தார்கள். அவர்களுக்கு வயது 96 அவர்கள் துணியை அவர்களே துவைப்பார்கள், வீட்டு வேலைகளை அவர்களே செய்வார்கள். நல்ல ஒரு தாயார், தேவன் தந்த பலத்தோடு, சுகத்தோடு இருந்து வாழ்ந்து மரித்திருக்கிறார்கள். தற்போது சிலருக்கு ஆண்டவர் கொடுத்த பலன் 40 வயதிலேயே தள்ளாடுகிறார்கள், தடுமாறுகிறார்கள், பலன் குறைந்து போய்விடுகிறது. சிலருக்கு படிக்கட்டு ஏற முடியாமல் மூச்சு வாங்குகிறது. ஆனால் இந்த காலத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை, போராட்டம். வாக்குவாதம், எரிச்சல், கோபம், பழிவாங்குதல், ஏமாற்றப்படுதல் இவைகளைப் பார்க்கும் போது உள்ளம் உடைந்து போய் விடுகிறார்கள். ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் நான் ஏன் வாழ வேண்டும் என்று தவறான முடிவுகளுக்குசெல்கிறார்கள். மனமடிவில் துவண்டு விடுகிறார்கள், மனமுறிவு ஏற்படுகிறது.

2 கொரி 4:8-ல் பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார் நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை என்று.நாங்கள் எப்பக்கம் நெருக்கப்பட்டும், மருத்துவர்களால் கைவிடப்பட்டும், கூட இருந்தவர்களால் பழிவாங்கப்பட்டும், எல்லா சூழ்நிலையில் கடந்து வந்தாலும் நாங்கள் கைவிடப்படுவதில்லை, மனம் முடிவடைவதில்லை என்று சொல்லுகிறார். இனி நான் ஜெபிக்க மாட்டேன்,இனி நான் ஊழியம் செய்யமாட்டேன். எனக்கு போராடப்பெலனில்லை என்று மனிதன் சொல்லுகிறான். யோபு சொல்லுகிறார்பூமியிலே மனிதனுக்கு போராட காலம் உண்டு என்று. யோபுவின் சரீரம் முழுவதுமó அழுகி நாறுகிறது, நரம்புகள் எல்லாம் தெரிகிறது. சொந்த மனைவி துரோகியாக மாறிவிட்டாள், தேவனை தூஷித்து ஜீவனை விட சொல்லுகிறாள். இந்த நிலையில் யோபுமனம் உடைந்து இருப்பார். ஆனால் ஆண்டவர் மீது நம்பிக்கையோடு இருந்தார்.

1. உன் காலத்திற்கு முன் நீ சாவதில்லை.

என்னால் இந்த பிரச்சனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை, என் குடும்பத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியினால்மற்றவர்களை என்னால தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லைஎன்று நீங்கள் மனம் உடைந்து இருக்கலாம். சாவதைத் தவிர வேறு வழி இல்லை. வறுமை, கஷ்டம்,கணவன் கைவிட்டு விட்டு சென்று விட்டான், பெற்ற பிள்ளைகளும் சொத்தை எழுதி வாங்கி, அபகரித்துச் சென்று விட்டார்கள். நான் ஏன் வாழ வேண்டும், நான் ஏமாற்றப்பட்டேன். என் பணம் அபகரிக்கப்பட்டுவிட்டது. எனக்கு வர வேண்டிய சொத்துக்கள் வரவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.ஒரு சகோதரி வந்து என்னிடம் அழுதார்கள்என் கணவர் மரித்து போய்விட்டார், ஆனால் அவரோடு கூட பிறந்தவர்கள் எங்களுக்கு தெரியாமலே சொத்துக்களை விற்று விட்டார்கள். ஒரு ரூபாய் கூட எங்களுக்கு தரவில்லை என்று மிகவும் மனமுடைந்து போய் விட்டார்கள். இப்படித்தான் ஒவ்வொருவரும் பல பிரச்சினைகளின் ஊடாய் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சிரிக்கிறார்கள், ஆனால் உள்ளத்தில் மிகுந்த வேதனையோடு இருக்கிறார்கள்.

பிரசங்கி 7:16,17-ல் கர்த்தருடைய வார்த்தை இப்படி சொல்லுகிறது மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே, உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்? மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே, உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்? ஆண்டவர் நமக்கு ஒரு நியமத்தை வைத்திருக்கிறார். இந்த பூமியில் நீ இத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்று. அதனால்தான் வேதத்தில் நீடித்த நாட்களாய் உன்னை திருப்தியாக்குவேன் என்று சொல்லப்பட்டுள்ளது. என்னுடைய போராட்டங்கள் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, என்னால் வாழ முடியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

குடும்ப சண்டையில் கூட சிலர் சொல்லுவார்கள் நான் இறந்தால்தான் உனக்கு தெரியும் என்று. இந்த வார்த்தையை சாத்தான் எழுதி வைத்துக் கொள்ளும் நீதிபதி அவர்களே, நான் அல்ல உன் கட்சிக்காரரே இந்த வார்த்தைகளை சொல்லுகிறார்கள் என்று சொல்லுவான். அந்த வார்த்தையை வைத்து தான் இந்த மனிதன் பூமியில் வாழ தகுதியற்றவன் என்றுசாத்தான் நம்மோடு போராடுவான். நாமும் கூட இப்படி பேசி இருப்போமானால் அதை இந்த நாளில் தேவனிடத்தில் அறிக்கை செய்து அதற்காக மன்னிப்புகேட்போம். சாத்தானை பிரியப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசக்கூடாது. காலத்திற்கு முன்பே நாம் மரிப்பதை தேவன் விரும்பவில்லை. நம் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது சாகிறவனுடைய சாவை தேவன் விரும்பவில்லை, மனம் திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்.

2. உன்னை வாழ வைக்கத்தான் இயேசு வந்தார்.

நம்மை வாழவைக்கத்தான் இயேசு மரணத்தை ருசி பார்த்தார். சாத்தான் திருடுகிறவன், கொல்லுகிறவன், அழிக்கிறவன். ஏன் வாழ்கிறாய்? நீ தான் பிடிபட்டு விட்டாயே, குற்றுயிராய் கிடக்கிறாயே இனி நீ வாழ வேண்டுமா? என்று நம்மை பார்த்து கேட்பான். யோவான் 10:10-ல் திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்என்றார். இன்றைக்கு தேவன் உங்கள் சுகவீனத்தை,பெலவீனத்தை, அலைச்சலை, கண்ணீரை, மரணத்தை தேவன் விரும்பவில்லை. ஆண்டவர் மனிதனை நல்லவனாக படைத்தார்,ஏதேனில் நித்திய வாழ்க்கையை வைத்திருந்தார். என் கூடவே இருக்க வேண்டும், இந்த தோட்டத்தில் என்னோடு உலாவ வேண்டும், என் சத்தத்தை கேட்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஒரு நியமத்தை வைத்தார், இந்த தோட்டத்தில் உள்ள எல்லா கனிகளையும் நீங்கள் புசிக்கலாம், ஆனால் ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ புசிக்கக் கூடாது என்றார். அதை நீங்கள் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றார். முதலில் உன் ஆத்துமா செத்துப் போய்விடும், இரண்டாவது உன் சரீரம் உருக்குலைந்து போய்விடும். தேவன் முதலில் மனிதனை படைக்கும் போது சாவே இல்லாமல் தான் படைத்திருந்தார். சாவு என்பது சாத்தானுக்காக நியமிக்கப்பட்டிருந்தது, அவனுக்கு ஒரு முடிவு அது.ஆதி 3:4,5-ல் அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி, நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.தேவன் அந்த கனியை புசிக்கும் நாளில் நீங்கள் சாவீர்கள் என்றார். சாத்தானோ நீங்கள் அதை பசிக்கும் நாளில் சாகவே சாவதில்லை என்றது.

இன்றைக்கு கிறிஸ்தவத்தில் கூட நிறைய பேர் நீங்கள் சாகவே சாவதில்லை என்று சொல்லி உபதேசிக்கிறார்கள். தவறான உபதேசங்களை போதித்து மக்களை திசை திருப்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சொத்துக்களையும், உடைமைகளையும் எழுதிக்கொடுக்கிறார்கள். நீங்கள் சாகவே சாவதில்லை என்று சொல்லுவது சாத்தானுடைய உபதேசம். இந்த உபதேசத்திற்கு நாம் செவி சாய்க்க கூடாது. இந்த தவறான உபதேசத்தை நாடி தேடி போகிறார்கள். சாத்தான் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்என்று வேதம் நமக்கு தெளிவாக சொல்லுகிறது. ஏவாளை வஞ்சித்து, அந்த இடத்திற்கு கூட்டிட்டு போய், அந்த பலத்தை தொடóடு, பறித்து, சாப்பிட வைத்தான். ஆண்டவருக்கு ஏவாள் மீது கோபம் வந்தது. சாத்தான் அந்த கனியை புசிக்க வைத்து, வாழ்வளிக்கும் அந்த தோட்டத்தை விட்டு அவர்களை வெளியே தள்ள வைத்தான். ஆதி 3:24-ல் அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்கிறது போல, அவரும் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய் இந்த பூமிக்கு இறங்கி வந்து, தன்னுடைய உயிரையே கொடுத்து. நம்மை மீட்டெடுத்தார். என் பிள்ளை, என்னுடையஇரத்தம், என் உறவு என்று அவர்களுக்காக அவருடைய இதயம் துடிக்கிறது.எபிரே 2:14-ல் ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார், மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு, இந்த பூமியில் மனித அவதாரம் எடுத்து ஒரு கன்னியின் வயிற்றில் இயேசு என்ற பெயரில் வந்து பிறந்தார்.எபிரே2:9-ல் தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். இயேசு மரணத்துக்கு நியமிக்கப்பட்டார், மரணத்திற்கு பாத்திரவானாக, மரணத்தை ருசி பார்த்தார். அதுவரைக்கும் மனிதர்கள் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை இந்த பூமியில் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த உலகத்தில் தேவனைத் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவன் உண்டு, பாவத்தை தேடுகிறவர்களுக்கு சம்பளம் உண்டு, அந்த சம்பளம்மரணம். ரோமர் 6:23-ல் பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

இயேசு சொல்கிறார் நான்வாழ்வதால் உன்னையும் வாழ வைப்பேன், என்னை தேடினால் உன்னை நாôன் வாழ வைப்பேன் என்கிறார். இந்த வார்த்தைகளó தேவன் எனக்காக எழுதினது. 16 வயதில் நான் வாழ தகுதியற்றவனாய், வறுமையின் பிடியில் சிக்கி தவித்த போது, விவசாயத்திலும் முன்னேற்றமம் இல்லை நஷ்டம், நல்ல வேலை இல்லை, சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லை, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன். ஒரு நண்பர் மூலம் இயேசுவை நான் தேட ஆரம்பித்தேன். இயேசு வாழ்கிறார் என்பதை அப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். யோவான் 14:19 கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் இப்படியாக சொல்லப்பட்டுள்ளதுநான் வாழ்கிறேன் உன்னை வாழ வைப்பேன் என்று எழுதப்பட்டுள்ளது. 1982-ல்என்னை தேடி வந்து, என் கண்ணீரை துடைத்து நான் வாழ்கிறேன் என்று சொல்லிஎனக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்துஎனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்து, ஒரு ஊழியத்தை கொடுத்தார், என்னை வாழ வைத்த தெய்வம் உங்களையும் வாழ வைப்பார்.

சாது சுந்தர் சிங் இந்தியாவினன் அப்போஸ்தலர். தன் வாலிப வயதில் உண்மையான தெய்வம் யார் என்று தேடினார். உண்மையான தெய்வம் யாரென்று தேடித்தேடி திரிந்த அவர் ஒரு தீர்மானம் பண்ணினார் இன்று இரவிலிருந்து காலை நாலு மணி வரைக்கும் நான் பார்ப்பேன் உண்மையான தெய்வம் ஒன்று இருந்தால் அது என் முன்பு வந்து தோன்றட்டும் இல்லை என்றால், காலை நாலு மணி ட்ரெயினில் நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று. கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் மூடிவிட்டு அவர் வணங்கின தெய்வங்களை கூப்பிட்டும் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவர் பூட்டி இருந்த அறையின் ஜன்னலில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் தோன்றினது. அவர் நினைத்தார் அவருடைய தெய்வங்கள் வருவார்கள் என்று. ஆனால் ஒரு சிலுவை தோன்றியதுஅதிலிருந்து ஒரு கனிவான குரல் ஒலித்ததுசுந்தர் சிங் நான் இயேசு என்று ஒலித்தது. அன்றிலிருந்து இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருக்காக வாழ ஆரம்பித்தார். அதற்கப்புறம் அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் சொன்னபோது எனக்கு இருந்தது ஒரு இருதயம் அதை நான் இயேசுவுக்கு கொடுத்துவிட்டேன். இந்தப் பெண்ணிற்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்றாராம். அவர் இயேசுவுக்கு தன்னை அர்ப்பணித்து இயேசுவுக்காக தனிமையில் வாழ்ந்தார். இந்திய தேசத்தில் தோமாவிற்கு அடுத்து அவர்தான் அதிகமாக இந்த தேசம் முழுவதும் ஊழியம் செய்தவர். அந்த சுந்தர் சிங்கை சாதுவாக மாற்றி இந்த இந்தியாவில் வாழ வைத்த தெய்வம் உன்னை விட்டு விடுவாரா? உன்னை ஏமாற்றினவர்களுக்கு முன்பாக உன்னை கைவிட்டு விடுவாரா? நீடித்த நாட்களால் உன்னை திருப்தியாக்கப் போகிறார்.

யோசேப்பை குழியில் தள்ளினார்கள், சாகிறவனுடைய சாவை நான் விரும்பவில்லை என்று சொன்ன தேவன் அவனை அந்த குழியில் இருந்து தூக்கி எடுத்தார். பொய் குற்றம் சாட்டப்பட்டு அவனை சிறையில் அடைத்தார்கள். சிறைச்சாலையிலேயே தன் ஜீவன் போய்விடும் என்று யோசேப்பு நினைத்தான். சங்கீதம் 91:15,16-ன்படிஅவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். என்ற வார்த்தையின்படி தேவன் நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, இரட்சிப்பை அவனுக்குக் காண்பித்து, தப்புவித்து, அவனை அந்த தேசத்தில் கனப்படுத்தினார். இன்றைக்கு இந்த வார்த்தையை வாசிக்கின்ற உங்களைப் பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார் சாக வேண்டும், போராட பெலனில்லை என்று நினைக்கிற உன்னை நீடித்த நாட்களால்திருப்தியாக்கி, ஆபத்திலே அவனோடு நான் இருந்து அவனை தப்புவித்து அவளை கணப்படுத்துவேனó என்று. என் ஜீவன் மருத்துவர்கள் கையில் இல்லை, வியாதியின் கையில் இல்லை என் ஜீவன் கர்த்தருடைய கையில் இருக்கிறது. நீடித்த நாட்களால் என்னை திருப்தியாக்குகின்ற தேவன் அவர் என்றும் வாழ்கிறார்.

உபா 32:40-ல் நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.நாம் ஆராதிக்கிற தேவன் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்று சொல்லப்பட்டுள்ளது.நம்முடைய பரம தகப்பன் தமது சொந்த இரத்தத்தை சிந்தி, விலை கொடுத்து நம்மை மீட்டெடுத்து, அவருடைய பிள்ளையாக நம்மை மாற்றி இருக்கிறவர். சொல்லுகிறார் நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்று. நம் எல்லாருக்கும் ஒரே தகப்பன் அவரே. வானத்தையும் பூமியையும் படைத்தவர். நம்முடைய சரீர பிரகாரமான தகப்பனை காட்டிலும், நம்முடைய பரம தகப்பன் பெரியவர். அவர் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவராய் இருக்கிறார். அவர் வாழ்கிறதினால் நம்மையும் வாழவைக்கிறார்.

3. அவர் நீண்ட ஆயுசுள்ளவர்

நாம் அப்பா நித்தியமானவர். இன்றைக்கும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய ஆயுசுக்கு முடிவே இல்லை.தானி 9:13-ல் இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார், அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். இந்தநாளிலும் ஆண்டவர் அநேகருக்கு ஆயுசு நாட்களை கூட்டி தருகிறார். மரணப்படுக்கையை மாற்றுகிறார். நீ மனம் திரும்பினால் பிழைப்பாய், உன் வாழ்க்கை கட்டப்படும். உன்னை விட்டு தூரம் போன எல்லாரும் உன்னிடத்தில் வருவார்கள். நான் உன் மேல் அன்பாய் இருக்கிறதை அவர்கள் அறியும்படி செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன்னை ஆட்கொண்டவர், உனக்காக தன்னுடைய இரத்தத்தை சிந்தி, விலை கொடுத்து வாங்கினவர் இப்பொழுது உன்னை பார்த்து சொல்லுகிறார்இனி உங்களுக்கு எலும்பு தேய்மானம் இல்லை, நரம்புத் தளர்ச்சி இல்லை, பெலவீனனும் தன்னை பெலவான் என்று சொல்லுவான். யோவேல் 3:10-ல் உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள், பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து அவரே.

இன்றைக்கு அந்த தேவன் உங்களைப்பெலப்படுத்தப் போகிறார். சூம்பிப் போன உறுப்பு, பலவீனப் பட்டுப்போன உறுப்பு, எந்த பகுதியில் நரம்புகளில் இரத்த அடைப்பு இருக்கிறதோ அந்த உறுப்புகளுக்கு நீண்ட ஆயுசை கொடுக்கிற ஒரு தேவன்இருக்கிறார். அவர் என்றென்றைக்கும் ஜீவித்து இருக்கிறவர். அவர் உன் அருகில் வந்து, உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற உன்னை பார்த்து, குற்றுயிராய் கிடக்கிற உன்னை பார்த்துபிழைத்திரு என்கிறார்.எசேக்கியேல் 16:6-ல்நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன், ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன். மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் கிடைக்கிற உன்னை வாழ்ந்திரு, பிழைத்திரு என்று சொல்லுகிறார். சாத்தான் சொல்லுவான் நீ சாகப்போகிற, நீ தோல்வி அடைந்திட்டாய், உன் காலம் முடியப் போகிறது என்று சொல்லுவான். ஆனால் இயேசு உன் அருகில் வந்து உன் தோள் மேல் அவருடைய கைகளைப் போட்டுநான் வாழ்வதால் உன்னையும் வாழ வைப்பேன் என்றுசொல்லுகிறார். சாகிறவனுடைய சாவை நான் விரும்ப மாட்டேன். அவனுக்கு ஆயுசு நாட்களை கூட்டி தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

4. கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு

எசேக்கியாநான் சாகப் போகிறேனே, நாளைய தினத்தை நான் காண்பேனோ என்று அழுதான். அவர் மண்ணுயிரைக் காப்பவர். சங்கீதக்காரன் சொல்லுகிறார் மண்ணிலே நான் படுக்கும் முன்னமே என் பாவங்களை மன்னித்து விடும் என்று கெஞ்சுகிறான். எசேக்கியா அழுது அழுகையை பார்த்து15 ஆண்டுகள் ஆயுசு நாட்களை கூட்டி கொடுத்தார். யோபுவுக்கு 140 ஆண்டுகளóஆயுசு நாட்களை கூட்டி கொடுத்தார். அந்த தேவன் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஒவ்வொரு நாளும் செத்து மடிகிற வாழ்க்கை, என் குடும்பத்தை நடத்திடுவேனா? வேலை கிடைக்குமா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம். பவுல் சொல்கிறார் 1 கொரி 15 ஆம் அதிகாரத்தில் அனுதினமும் நான் சாகிறேன் என்று. கர்த்தராகிய தேவனால் மரணத்துக்கு நீங்களாக்கும் வழிகள் உண்டு. இயேசு என்றைக்கு சிலுவையில் மரித்தாரோ அன்றைக்கே அந்த கேரூபீன்கள் ஏதேன்தோட்டத்தில்சுடரொளி பட்டயத்தை எடுத்தார்கள். அந்த அடைப்பை திறந்தார்கள். இயேச சொன்னார் நானே வழி, சத்தியம், ஜீவன் என்னாலன்றி ஒருவனும்பரலோக ராஜ்யத்துக்குள் வர முடியாது என்றார். கர்த்தராகிய தேவனால் மரணத்துக்கு நீங்கலாகும் வழிகள் உண்டு. ஆகவே தான் தேவனால் தைரியமாய் செல்ல முடிந்தது சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று. மனம் திரும்புங்கள் குடி பழக்கத்தை, விபச்சாரத்தை விடுங்கள் அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள், பிழைப்பீர்கள்.சங்கீதம் 68:20-ல் நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார், ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

இயேசு நமக்காக சிலுவையில் தன் உயிரை கொடுத்து மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்றார். இன்றைக்கு அவர் மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய திறவுகோலை உடையவராய் இருக்கிறார். வெளி 1:18-ல் மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்.மரணத்தை ஜெயித்து, சத்துருவின் தலையை நசுக்கி நான் வாழ்கிறேன் உங்களையும் இந்த பூமியில் நான் வாழவைப்பேன். பரலோகம் கொண்டு செல்லுவேன் என்கிறார். எசே 18 23-ல் துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இன்றைக்கு ஆண்டவருடைய சமூகத்தில்உங்களை தாழ்த்தி, ஜெபம் பண்ணி,உங்களை அர்ப்பணிக்கும் போது அனைவருக்கும் வாழ்வு உண்டு, நித்தியஜீவன் உண்டு, முடிவில்லாத ஒருவாழ்வு உண்டு, ஆண்டவராகிய தேவன் தாமே இந்த செய்தியை வாசிக்கிற உங்கள் அனைவரையும் நீடித்த நாட்களால், நீண்ட ஆயுசைத் தந்து வழி நடத்துவாராக!.